சென்னை: “திமுக அரசின் கைது நடவடிக்கைகளால் எங்களை முடக்கி விட முடியாது. திமுக ஊழல் ஆட்சியின் முறைகேடுகளை, தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆவேசமாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ரூ.1,000 கோடிக்கு மேல் நடைபெற்றுள்ள டாஸ்மாக் ஊழலின் ஏ1 குற்றவாளி முதல்வர் ஸ்டாலின் கீழ் செயல்படும் திமுக காவல் துறை, தமிழக பாஜகவின் இன்றைய டாஸ்மாக் முற்றுகைப் போராட்டத்தை எப்படியாவது முடக்கவேண்டும் என்று படாத பாடுபடுகிறது. முதல்வர் ஸ்டாலின் அவர்களே, உங்கள் கைது நடவடிக்கைகளால் எங்களை முடக்கி விட முடியாது. உங்கள் ஊழல் ஆட்சியின் முறைகேடுகளை, தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்” என்று அண்ணாமலை கூறியுள்ளார்.