மதுரை: “தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருக்கிறது. எங்களது நிலைப்பாடு என்ன என்பது குறித்து தேர்தல் நெருங்கும்போது தெரிவிப்போம். எங்களது தேர்தல் அறிக்கை திட்டங்களை தமிழக பட்ஜெட்டில் அறிவித்திருப்பதால் வரவேற்பு தெரிவித்தோம்” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (மார்ச் 17) விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கடந்த 2006-ல் தேமுதிக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற திட்டங்களே தமிழக அரசின் பட்ஜெட்டிலும் அறிவித்துள்ளனர். இதை நாங்கள் வரவேற்கிறோம்.பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்படுத்தியுள்ளனர். இதுவும் நாங்கள் கொண்டு வந்த திட்டமே.