சென்னை: கைதிகளின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை முறையாக பயன்படுத்தப்பட்டதா? என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து தணிக்கை செய்து ஜன.30-க்குள் அறிக்கை தர தமிழ்நாடு தலைமை கணக்கு தணிக்கையாளருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கைதிகளின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் 20% தொகை முறையாக பயன்படுத்தப்படுவது இல்லை என மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேலூர் சிறையில் தனது கணவருக்கு முதல் வகுப்பு ஒதுக்க கோரியும் கடலூரைச் சேர்ந்த தீபா லக்ஷ்மி தொடர்ந்த மனுதாக்கல் செய்துள்ளார்.
The post கைதிகளின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை முறையாக பயன்படுத்தப்பட்டதா? – ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.