கேஷத்தின் ஆயுள் கூட்டும் ஆர்கானிக் ஆயில்கள்!

2 months ago 11

சரும பராமரிப்புக்கு அடுத்தபடியாக பெண்கள் முக்கியத்துவம் கொடுப்பது கூந்தல் நலனுக்குத்தான். கூந்தல் முழுநீளமாக வளர வேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பமாக இருக்கும். ஆனால் அதற்கு மாறாக உணவு, வாழ்க்கை முறை, தூக்கமின்மை காரணமாக முடி உதிர்வு பிரச்னையை பலரும் எதிர் கொள்கிறார்கள். இந்த பிரச்னைகளுக்கு தீர்வாக இயற்கையான எண்ணெய்கள் பல உள்ளன. ஒவ்வொரு எண்ணெயும் ஒவ்வொரு விதமான பண்புகளைக் கொண்டிருக்கின்றன. இதோ சில எண்ணெய்களும் அவற்றின் பலன்களும்.

*ஆமணக்கு எண்ணெய்: ரிசினோலிக் அமிலம் ஆமணக்கு எண்ணெயில் அதிகம் உள்ளது. அது உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. முடி மீண்டும் நன்கு வளர ஊக்குவிக்கிறது.
*ஆலிவ் எண்ணெய்: ஆலிவ் எண்ணெயில் ஆன்டி ஆக்சிடென்டுகள் மற்றும் வைட்டமின் ஈ நிரம்பியுள்ளன. அவை உச்சந்தலையில் ஈரப்பதத்தை தக்கவைக்க துணைபுரியும். முடி உதிர்வதையும் குறையும்.
*தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெணயில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. அவை உச்சந்தலைக்கு ஊட்டமளிக்க கூடியவை. மயிர்க்கால்களையும் பலப்படுத்தும். முடி வளர்ச்சியடையவும் ஊக்குவிக்கும். கூந்தலுக்கு மிருது தன்மையையும் பொலிவும் ஏற்படுத்திக் கொடுக்கும். பொடுகு பிரச்னையும் போக்கும்.
*லாவெண்டர் எண்ணெய்: இது அமைதியான பண்புகளுக்கு பெயர் பெற்றது. அதாவது மன அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்குவகிக்கிறது. முடிவளர்ச்சியை அதிகரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
*ரோஸ்மேரி எண்ணெய்: இந்த எண்ணெயில் இருக்கும் கார்னோசிக் அமிலம் உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். முன் கூட்டியே முடி நரைப்பதையும், முடி உதிர்வதையும் தடுக்கும். முடிவளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.
*டீட்ரீ எண்ணெய்: இந்த எண்ணெய் பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளை கொண்டது. உச்சந்தலை ஆரோக்கியத்தை காக்கும். முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.
*நெல்லிக்காய் எண்ணெய்: வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடைன்டுகள் நிறைந்த நெல்லிக்காய் எண்ணெய் முடியின் வேர்களை பலப்படுத்தும். முடி வளர்ச்சிக்கும் உதவும்.
*மிளகுக்கீரை எண்ணெய்: உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை தூண்டுவதற்கு மிளகுக் கீரை எண்ணெய் உதவும். முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். முடி உதிர்வதை தடுக்கும்.
*ஜொஜோபா எண்ணெய்: உச்சந்தலையின் நலன்காக்க இந்த எண்ணெய் உதவும். ஈரப்பதத்தை தக்க வைப்பதில் இதன் பங்களிப்பு முக்கியமானது. முடிவளர்ச்சிக்கும் பயன்படும்.
*ஆர்கன் எண்ணெய்: மொரோக்கா நாட்டில் வளரும் ஆர்கன் மரத்தின் பழங்களிலிருந்து ஆர்கன் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இதனை திரவத்தங்கம் என்றும் அழைக்கிறார்கள். இந்த எண்ணெயில் இருக்கும் அமிலங்கள் தலைமுடியை வறட்சியில் இருந்து காக்கும். முடிக்கு மென்மைத்தன்மையை அதிகரிக்கச்செய்யும். கூந்தலின் நுனிப்பகுதியில் பிளவு ஏற்படுவதையும் தடுக்கும். முடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.
– அ.ப.ஜெயபால்.

The post கேஷத்தின் ஆயுள் கூட்டும் ஆர்கானிக் ஆயில்கள்! appeared first on Dinakaran.

Read Entire Article