கேரள மாநிலத்தில் இருந்து பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு மாம்பழம் வரத்து துவங்கியது

6 hours ago 4

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பெரிய மார்க்கெட்டாக கருதப்படும் காந்தி மார்க்கெட்டுக்கு, ஒவ்வொரு ஆண்டும் மாம்பழம், தர்பூசணி, பலாபழம், அன்னாசிபழம் மற்றும் கரும்பு உள்ளிட்டவை சீசனை பொறுத்து விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் துவக்கத்தில் இருந்து தர்பூசணி வரத்து அதிகமாக காணப்பட்டது. தற்போதும் வெளிமாவட்டங்களில் இருந்து லாரி மற்றும் டெம்போக்களில் கொண்டுவரப்படும் தர்பூசணிகளை, வெளியூர் வியாபாரிகள் மொத்த விலைக்கு வாங்கி செல்கின்றனர். இந்நிலையில், தற்போது மார்க்கெட்டுக்கு மாம்பழம் வரத்து துவங்கியுள்ளது.

இந்த சீசன் தொடர்ந்து ஜூன் மாதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியிருந்து மாம்பழம் வரத்து குறைவாக இருந்தாலும், கேரள மாநிலத்தில் இருந்து மாம்பழங்கள் அதிகளவில் கொண்டுவரப்படுகிறது. இதில், கேரளாவில் இருந்து செந்தூரம், அல்போன்சா, பங்கனபள்ளி, மல்கோவா, குந்தா, இமாம்பசந்த், மல்லிகா உள்ளிட்ட வகையான மாம்பழங்களின் வரத்து அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக மார்க்கெட்டுக்கு டன் கணக்கில் மாம்பழங்கள் முதற்கட்ட மாங்காயாக வரபெற்றுள்ளது.

இதனை மொத்தமாகவும், சில்லரையாகவும் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.அதிலும், திருப்பூர் மற்றும் ஈரோடு, கோவை பகுதி வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கி செல்கின்றனர். தமிழ் புத்தாண்டு (14ம் தேதி) நெருங்குவதால், மாம்பழங்களின் வரத்து மேலும் அதிகரிக்கும் எனவும், கூடுதல் விலைக்கு விற்பனையாகும் என மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post கேரள மாநிலத்தில் இருந்து பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு மாம்பழம் வரத்து துவங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article