புதுக்கடை, டிச. 7: கூட்டாலுமூடு தேவஸ்தான மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சி.பி.எஸ்.சி பள்ளியில் பயிலும் என்சிசி மாணவர்களுக்கான சான்று வழங்கும் விழா தாளாளர் துளசிதாஸ் தலைமையில் நடந்தது. தலைவர் குமார் முன்னிலை வகித்தார். பொருளாளர் சௌந்தரராஜன், துணைத் தலைவர் முருகன், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் நாராயணன், சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் சுனில் குமார் ஆகியோர் சான்று வழங்கி வாழ்த்துரை வழங்கினர். என்சிசி அதிகாரி அனில் குமாருக்கு மாணவர்கள் நினைவுப்பரிசு வழங்கினர்.
The post கூட்டாலுமூடு மெட்ரிக், சி.பி.எஸ்.இ பள்ளிகளில் என்.சி.சி சான்று வழங்கும் விழா appeared first on Dinakaran.