குழந்ைதகளுடன் இளம்பெண் மாயம்

3 hours ago 2

தர்மபுரி, மே 21: கம்பைநல்லூர் அடுத்த ஜடையம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி சினேகா (25). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 14ம் தேதி வழக்கம்போல், மாசிலாமணி வேலைக்கு சென்று விட்டார். மாலை வீட்டிற்கு வந்தபோது, மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் வீடு மற்றும் சினேகாவின் தோழிகள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாசிலாமணி, கம்பைநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குழந்ைதகளுடன் இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Read Entire Article