குழந்தை பிறந்த பிறகு அளித்த தவறான சிகிச்சையால் தாய் உயிரிழப்பு - தேமுதிக கண்டனம்

5 hours ago 4

சென்னை: குழந்தை பிறந்த பிறகு அளித்த தவறான சிகிச்சையால் தாய் உயிரிழப்பு ஏற்பட்டதற்கு தேமுதிக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில், ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண் (இலக்கியா) பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு குழந்தை பிறந்த நிலையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு அளிக்கப்பட்ட தவறான மருத்துவச் சிகிச்சையால் அவர் உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. மருத்துவர்களின் கவனக் குறைவால் ஒரு உயிர் போனது என்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

Read Entire Article