குளச்சல், ஜன.12: குளச்சல் அருகே சேனம்விளை பகுதியை சேர்ந்தவர் சேம்ராஜ். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உஷாராணி (36). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ஜெய சந்தோஷ் (40) என்பவர் தனது வீட்டு மாடியில் நின்று கொண்டு உஷாராணியிடம் ஆபாச சைகை காண்பித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் உஷாராணி காம்பவுண்ட் சுவரை உயர்த்தி கட்டினார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ஜெய சந்தோஷ் காம்பவுண்ட் சுவரை ஏறி குதித்து வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த உஷாராணியிடம் ஆபாச சைகை காண்பித்து மீண்டும் தொல்லை கொடுத்தார். அந்த நேரம் உஷாராணி சத்தம்போடவே அக்கம் பக்கத்தினர் வந்தனர். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டிவிட்டு ஜெய சந்தேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து உஷாராணி குளச்சல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெய சந்தோசை கைது செய்தனர்.
The post குளச்சல் அருகே பெண்ணிடம் ஆபாச சைகை காட்டியவர் கைது appeared first on Dinakaran.