குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 177 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை

2 months ago 8

நாகப்பட்டினம்,டிச.3: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடந்தது. குறைதீர் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 177 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தின் கட்டுப்பாடடில் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிக பாதுகாவலர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட திருநங்கை வெண்பாவிற்கு பணி நியமன ஆணையினை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார். கூட்டத்தில், டிஆர்ஓ பேபி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 177 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article