
ஆவுடையார்கோவிலில் பிரசித்தி பெற்ற குறிச்சிக்குளம் முத்து மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 1ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா தொடங்கியதிலிருந்து தினமும், காலை மாலை இரு வேளையும் அம்மன் வீதி உலா நடைபெற்றது. ஆவுடையார் கோவில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் பறவை காவடி, பால்குடம் காவடி எடுத்து நான்கு ரத வீதிகளில சுற்றி வந்து அம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. முத்துமாரி அம்மனுக்கு 16 திரவியங்களால் அபிசேக ஆராதனைகள் செய்து தேரில் எழுந்தருளச் செய்தனர். பின்னர் தேரோட்டம் தொடங்கியது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்து மீண்டும் அம்மன் கோவிலை அடைந்தது. தேரோடும் விதிகளில் அம்மன் கஞ்சி காய்ச்சி படைத்து அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர். பின்னர் பொதுமக்களுக்கு அம்மன் கஞ்சி வழங்கினார்கள்.