சிறுமிக்கு பாலியல் தொல்லை - சேவை இல்ல காவலாளிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

3 hours ago 2

சென்னை,

தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் அரசு சேவை இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தங்கி மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அந்த வகையில் சென்னை தாம்பரத்தில் அரசு சேவை இல்லத்தில் தங்கி 8-ம் வகுப்பு மாணவி கல்வி பயின்று வருகிறார்.

அந்த சேவை இல்லத்தில் காவலாளியாக பணியாற்றி வரும் மேத்யூ என்பவர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இந்த சம்பவத்தில் சிறுமிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, தற்போது ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவலாளி மேத்யூவை கைது செய்த போலீசார், அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து காவலாளி மேத்யூவை வரும் 23-ந்தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Read Entire Article