கும்பமேளா உயிரிழப்புகளுக்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும்: செல்வப்பெருந்தகை

1 week ago 2

சென்னை: “கும்பமேளா உயிரிழப்புக்கு பொறுப்பேற்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவியிலிருந்து விலகுவாரா? பெரும்பான்மை இந்து மதத்தினரின் சமய சடங்குகளை எப்படி அரசியல் ஆதாயமாக்குவது என்பது தான் பாஜகவின் உள்நோக்கமாக நீண்டகாலமாக இருந்து வருகிறது. இத்தகைய கவனக்குறைவு காரணமாக அப்பாவி மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். இதற்கு பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டும்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மவுனி அமாவாசை தினத்தையொட்டி மகாகும்பமேளாவில் புனித நீராட ஒரே நேரத்தில் 10 கோடி பக்தர்கள் திரண்டதால் ஜனவரி 29-ம் தேதி அதிகாலை பயங்கர நெரிசல் ஏற்பட்டு 30-க்கும் மேற்பட்டோர் பலியான சோக நிகழ்வு நடந்துள்ளது. அறுபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரயாக்ராஜில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாகும்பமேளா ஜனவரி 13-ல் தொடங்கி பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறுகிற நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினால் மோட்சத்துக்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மக்கள் திரண்டதால் இத்தகைய பேரிழப்பு நிகழ்ந்திருக்கிறது.

Read Entire Article