சென்னை: உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் எடப்பாடிக்கு பின்னடைவா? என சி.வி.சண்முகம் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட்டு விசாரணை நடத்த ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என கடந்த டிசம்பர் மாதம் அதிமுக சார்பில் வாதிடப்பட்டது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் கொடுத்த மனுக்களையும் சேர்த்து விசாரிப்பதாக தேர்தல் ஆணையம் கூறியது என இரட்டை இலை சின்னம் வழக்கை தேர்தல் ஆணையம் விசாரிப்பதற்கான தடை நீக்கப்பட்டது குறித்து சி.வி.சண்முகம் விளக்கம் அளித்தார்.
The post உயர்நீதிமன்ற தீர்ப்பால் அதிமுக உட்கட்சி விவகாரத்தில் எடப்பாடிக்கு பின்னடைவா?: சி.வி.சண்முகம் விளக்கம் appeared first on Dinakaran.