கும்பக்கரை அருவியில் 5வது நாளாக குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் சோகம்

2 months ago 12

தேனி: தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் அணை, ஆறுகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கண்மாய், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி.

நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலை, வட்டக்கானல், பாம்பார்புரம் உள்ளிட்ட பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால் நீர்வரத்து அதிகரித்து கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.

அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், 5வது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடர்கிறது. சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் அருவி வெறிச்சோடி காணப்படுகிறது. அருவிக்கு வரும் நீர்வரத்து குறைந்து சீராகும் வரை இந்த தடை தொடரும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post கும்பக்கரை அருவியில் 5வது நாளாக குளிக்க தடை: சுற்றுலா பயணிகள் சோகம் appeared first on Dinakaran.

Read Entire Article