சென்னை: குமரிக் கடல் பகுதியில் வளி மண்டல காற்று சுழற்சி நிலை கொண்டு இருப்பதால் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது.
அதன் காரணமாக மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்பதால் இந்த பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும், 24ம் தேதி வரை இதே நிலை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் வழக்கம் போல மேகமூட்டம் காணப்பட்டாலும், வெப்பநிலை 90 டிகிரி அளவுக்கு இருக்கும். நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
The post குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல காற்று சுழற்சி 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் appeared first on Dinakaran.