குண்டாசில் இருவர் கைது

2 weeks ago 4

ராமநாதபுரம், ஏப். 3: ராமநாதபுரம் மாவட்டம், உச்சிபுளி அருகே உள்ள பெருங்குளத்தை சேர்ந்தவர் பவின் (20), நாகச்சியை சேர்ந்தவர் காளீஸ்வரன் (21). இவர்கள் இருவர் மீதும் வழக்குகள் உள்ளன. கொலை முயற்சியில் ஈடுபட்ட இவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு எஸ்.பி.சந்தீஷ் பரிந்துரையின் பேரில், ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டார், அதன் படி ராமநாதபுரம் சிறையிலிருந்த அவர்களிடம் குண்டாசிற்கான ஆணை வழங்கப்பட்டு மதுரை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

The post குண்டாசில் இருவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article