
தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த சக்திவேல் மகன் முனீஸ்வரன் (வயது 34), ஆ.சண்முகபுரத்தில் சலூன் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். முனீஸ்வரன் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவாராம் இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு முனீஸ்வரன் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் மனைவி அவரை கண்டித்துள்ளார். இதையடுத்து குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மன வேதனையடைந்த முனீஸ்வரன் தனது படுக்கையறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.