வேளச்சேரி: மேடவாக்கம், அண்ணாமலை நகர், 1வது தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (27). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு ராஜேஷ் சண்டை போட்டதால், அவரது மனைவி கோபித்துக் கொண்டு தன் குழந்தைகளை அழைத்து கொண்டு, தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால், மனமுடைந்த ராஜேஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மேடவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர். நன்மங்கலம், பொன்னியம்மன் காலடி தெருவை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (27). எலக்ட்ரீஷியன்.
இவரது தாய், உறவினர் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பாண்டிச்சேரி சென்று இருந்தார். சந்தோஷ் குமார், அவரது தந்தை ரவி ஆகியோர் வீட்டில் இருந்தனர். நேற்று முன்தினம் தந்தையும் வேலைக்கு சென்று விட்டதால், சந்தோஷ்குமார் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். மாலையில், தந்தை ரவி வீட்டிற்கு வந்தபோது, சந்தோஷ்குமார் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. இதுகுறித்து மேடவாக்கம் வழக்கு பதிவு செய்து, சந்தோஷ்குமார் தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post குடும்ப தகராறில் இருவர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.