நாகர்கோவில், டிச. 6: கன்னியாகுமரி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 5 நான்கு சக்கர வாகனங்கள், பைக் 1 மற்றும் வருவாய் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கார், 2 ஆட்டோ, 1 பைக் என மொத்தம் 10 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட்டது. இந்த ஏலம் நாகர்கோவிலில் உள்ள குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் ராஜா, எஸ்ஐ வேல்முருகன், மாவட்ட வழங்கல் அதிகாரியின் நேர்முக உதவியாளர் தாசில்தார் கண்ணன் ஆகியோர் தலைமையில் வாகனங்கள் ஏலம் விடப்பட்டது. வாகனங்கள் ஏலம் எடுக்க மொத்தம் 23 பேர் கலந்து கொண்டு ஏலம் கேட்டனர். 10 வாகனங்களில் ஒரு பைக்கை தவிர மற்ற ஒன்பது வாகனங்களும் ஏலம் போனது. அந்த வாகனங்கள் ரூ.3 லட்சத்து 22 ஆயிரத்துக்கு ஏலம் போனது.
The post குடிமைப்பொருள் தடுப்பு துறையால் பறிமுதல் வாகனங்கள் ₹3.22 லட்சத்திற்கு ஏலம் appeared first on Dinakaran.