பிஹார் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா? - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி

2 hours ago 1

புதுடெல்லி: அதிக மக்கள்​ தொகை மற்றும் செழு​மையான வரலாற்று பின்ன ணி​யைக் கொண்ட பிஹார் மாநிலத்​துக்கு இதுவரை ஒரு நல்ல சர்வதேச விமான நிலையம் இல்லை என்று மத்திய நிதி​யமைச்சர் நிர்மலா சீதா​ராமன் தெரி​வித்​துள்ளார்.

பட்ஜெட் அறிவிப்​பில் பிஹார் மாநிலத்​துக்கு சாதகமான பல்வேறு அறிவிப்புகள் இடம்​பெற்றுள்ளன. சட்டப்​பேரவை தேர்தலை மனதில் வைத்தே இந்த பட்ஜெட்​டில் பிஹாருக்கு அதிக முக்​கி​யத்துவம் கொடுக்​கப்​பட்​டுள்ளதாக எதிர்க்​கட்​சிகள் குற்​றம்​சாட்டி வருகின்றன. இந்த நிலை​யில், பட்ஜெட்டுக்​குப் பிறகு ஊடகம் ஒன்றுக்கு அளித்த நேர்​காணலில் நிர்மலா சீதா​ராமன் கூறி​யுள்ள​தாவது: முன்​னாள் அமெரிக்க அதிபர் ஆபிர​காம் லிங்​க​னின் காலத்​தால் அழியாத சொற்​றொடரான ‘‘மக்​களின் அரசாங்​கம், மக்களால், மக்களுக்கு’’ அளிக்​கப்​பட்ட பட்ஜெட் இது. மக்களின் குரலை அடிப்​படை​யாகக் கொண்டே இந்த பட்ஜெட் தயாரிக்​கப்​பட்​டுள்​ளது. தேர்தலை மனதில் வைத்து இந்த பட்ஜெட் உருவாக்​கப்​பட்​டுள்ளது என்ற கருத்தை நான் ஏற்க​வில்லை. அப்படி​யென்​றால் அசாம் மாநிலத்​துக்​கும்​தான் தேர்தல் வருகிறது.

Read Entire Article