நல்லாட்சிக்கு மக்கள் தரும் மதிப்பெண்ணாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அமையட்டும் என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தொண்டர்களுக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: திமுக எத்தனையோ இடைத்தேர்தல்களை சந்தித்துள்ளது. தற்போது நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எதிர்பாராதவகையில் மனதில் சுமையுடன் எதிர்கொள்ள வேண்டிய களமாக அமைந்துவிட்டது.