குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் பெருக்கெடுக்கும் தண்ணீர்: பொதுமக்கள் கடும் அவதி

2 months ago 10

 

மதுரை, நவ. 22: மதுரையில், குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் எதிரொலியாக தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் முல்லைப் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் தற்போது நடந்து முடிந்துள்ளன. இதனால் வீடுகளுக்கு தினந்தோறும் குடிநீர் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் பொதுமக்கள் உள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால், தண்ணீர் வீணாக வெளியேறி சாலையில் தேங்குகிறது. இதன் எதிரொலியாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடனடியாக சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குடிநீர் குழாய் உடைப்பால் சாலையில் பெருக்கெடுக்கும் தண்ணீர்: பொதுமக்கள் கடும் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article