கீழ்வேளூரில் வீட்டின் கதவை உடைத்து பணம் திருடியவர் கைது

2 months ago 10

 

கீழ்வேளூர், டிச.9:கீழ்வேளூர் மேலவீதியை சேர்ந்தவர் முருகேசன் மகன்கள் வடமலை குமார், கேடிலி. முருகேசன் கடந்த மாதம் இறந்தார். இதையடுத்து அவரது மனைவி சந்திரா மகன் கேடிலியுடன் சென்னையில் வசித்து வருகிறார். மற்றொரு மகன் திருச்சியில் வசித்து வருகிறார். இந்நிலையில் கீழ்வேளூரில் உள்ள வீடு கணக்கப்பிள்ளை மேற்பார்வையில் உள்ளது. கடந்த நவம்பர் 30ம் தேதி வீட்டின் முன்பக்க கதவு உடைத்து அறையில் இருந்த பீரோவில் ரூ.50,000த்தை மர்ம நபர் கொள்ளையடித்துச் சென்றது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்கு பதிந்து குற்றவாளியை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் கீழ் வேளூரை அடுத்த குறுக்கத்தி தர்கா அருகே நின்றிருந்த நபரை ரோந்து போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து அவரிடமிருந்து ரூ.45,000த்தை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், பாபநாசத்தை சேர்ந்த ஜாபர் சாதிக் ( 38 ) என்பதும், வடமலைகுமார் வீட்டில் பணம் திருடியவர் என்பதும் தெரிந்தது. போலீசார் ஜாபர் சாதிக்கை கைது செய்தனர்.

The post கீழ்வேளூரில் வீட்டின் கதவை உடைத்து பணம் திருடியவர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article