கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ரூ.8.80 கோடியில் அதிநவீன உபகரணங்கள்

7 months ago 33

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.8.80 கோடி மதிப்பீட்டில் தீக்காய பிரிவில் அதிநவீன மருத்துவ உபகரணங்களை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதிஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: இந்தியாவில் தீக்காய சிகிச்சைக்கான 2-வது பெரிய மருத்துவமனையாக, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இம்மருத்துவமனை யில் 1973-ம் ஆண்டு 2 படுக்கைகளுடன் தீக்காய சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது. படிப்படியாக வளர்ந்து தற்போது 75 படுக்கை வசதிகளுடன் கூடிய தீக்காய சிகிச்சை பிரிவு சிறப்பாக செயல்படுகிறது.

Read Entire Article