திருமலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்: பக்தர்கள் அச்சம்

5 hours ago 3

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி, நேற்று காலை திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் 2வது மலைப்பாதை சாலையில் பைக்கில் சென்ற பக்தர்கள் ஒரு சிறுத்தையை கண்டனர். சாலையை கடந்து சென்ற சிறுத்தை குறித்து உடனடியாக தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியை ஆய்வு செய்தனர். திருமலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் அச்சத்தில் உள்ளனர்.

The post திருமலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்: பக்தர்கள் அச்சம் appeared first on Dinakaran.

Read Entire Article