கீழ்ப்பாக்கத்தில் தங்க நகை பட்டறையில் 20 பவுன் நகைகளுடன் ஊழியர் தப்பி ஓட்டம்

2 months ago 11

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் தெவை சேர்ந்தவர் அருண்குமார்(38). ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் அதே தெருவில் தங்க நகைகள் செய்யும் பட்டறையும் நடத்தி வருகிறார். இந்த பட்டறையில் மேற்கு வங்கு ஊழியர்கள் என 25க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். கடந்த 3 மாதங்களாக மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சைபுல் ரஹ்மன்(35) என்பவர் பட்டறையில் பணியாற்றி வந்தார். வழக்கம் போல் நேற்று காலை வெளியே சென்ற அவர், திரும்ப பட்டறைக்கு வரவில்லை.

உடனே உரிமையாளர் அருண்குமார் சைபுல் ரஹ்மனை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. உடனே சந்தேகமடைந்த உரிமையாளர் பட்டறையில் உள்ள நகைகளை ஆய்வு செய்த போது, அதில் 20 சவரன் நகைகள் மட்டு மாயமாகி இருந்தது. உடனே பட்டறையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சைபுல் ரஹ்மன் நகைகளை எடுத்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. பின்னர் சம்பவம் குறித்து பட்டறை உரிமையாளர் அருண்குமார் சிசிடிவி காட்சிகளுடன் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி போலீசார் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஊழியர் சைபுல் ரஹ்மனை தேடி வருகின்றனர்.

The post கீழ்ப்பாக்கத்தில் தங்க நகை பட்டறையில் 20 பவுன் நகைகளுடன் ஊழியர் தப்பி ஓட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article