கிளாம்பாக்கம் | பெண்ணை ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த இருவர் கைது

2 hours ago 2

கிளாம்பாக்கம்: பெண்ணை ஆட்டோவில் கடத்தி, பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு ஆட்டோ ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், சேலத்தில் இருந்து சென்னை மாதவரத்தில் உள்ள தனது தோழியின் வீட்டிற்கு செல்ல பேருந்து மூலம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு திங்கட்கிழமை ( 3.2.2025) இரவு வந்துள்ளார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வெளியே நின்றுகொண்டிருந்த அவரை, ஆட்டோ ஓட்டுநர் எங்கே செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளார். மாதவரம் செல்ல வேண்டும் என்று அந்த பெண் கூற, தான் மாதவரத்தில் இறக்கி விடுவதாகக் கூறி ஆட்டோவில் ஏறுமாறு அந்த பெண்ணை வற்புறுத்தி இருக்கிறார். அந்த பெண் மறுக்கவே, வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஓட்டுநர் ஏற்றியதாகக் கூறப்படுகிறது.

Read Entire Article