கிருஷ்ணகிரி அருகே 63 வயது முதியவரை வைத்து பள்ளிப் பேருந்தை இயக்கிய பரிதாபம்: பேருந்து மோதியதில் 13 வயது பள்ளி மாணவி படுகாயம்

3 months ago 14

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி சென்னை சாலையில் சுபேதார் மேடு பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்கு சொந்தமான பேருந்தை 63 வயது முதியவரான செட்டியம்பட்டி பகுதியை சேர்ந்த பிரகாசம் என்பவர் இன்று காலை பள்ளி மாணவ மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருவதற்காக பேருந்து இயக்கிக் கொண்டு டோல்கேட் அருகே லைன் கொள்ளை என்ற பகுதியில் சென்று கொண்டு இருந்தார்.

அப்பொழுது எதிரே சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த கேகே நகர் தர்கா பகுதியை சேர்ந்த பழையபேட்டை அரசு உருது நடுநிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு பள்ளி மாணவி வந்து கொண்டிருந்த பொழுது பள்ளி பேருந்து மோதியதில் 13 வயது மாணவி படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக பெங்களூர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post கிருஷ்ணகிரி அருகே 63 வயது முதியவரை வைத்து பள்ளிப் பேருந்தை இயக்கிய பரிதாபம்: பேருந்து மோதியதில் 13 வயது பள்ளி மாணவி படுகாயம் appeared first on Dinakaran.

Read Entire Article