கிராமத்தில் நுழைந்த யானை விரட்டியடிப்பு குடியாத்தம் அருகே பரபரப்பு

1 day ago 2

குடியாத்தம், ஏப்.18: குடியாத்தம் அருகே கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குடியாத்தம் வனப்பகுதி அருகிலுள்ள குடியாத்தம் அடுத்த தனகொண்டபள்ளி, சைனாகுண்டா, வீரிசெட்டிபள்ளி , பரதராமி, கொட்டமிட்டா, மோர்தானா, வி.டி.பாளையம் , கதிர்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்து தொடர்கதையாகி வருகிறது. இதனை விரட்டும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை குடியாத்தம் அடுத்த கொத்தூர் கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை பயங்கர பிளீரும் சத்தத்துடன் விவசாய நிலத்திற்குள் நுழைய முயன்றது. இதனை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பட்டாசு வெடித்து யானையை மீண்டும் காட்டுக்குள் விரட்டி அடித்தனர். யானை மீண்டும் கிராமத்திற்குள் நுழையும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் தூக்கத்தை இழந்தனர். யானையை நிரந்தரமாக விரட்டி அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளின் தொடர் கோரிக்கையாக உள்ளது.

The post கிராமத்தில் நுழைந்த யானை விரட்டியடிப்பு குடியாத்தம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article