ஜம்மு காஷ்மீரில் உள்ள பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறி உள்ளன. ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூண்டுள்ளது. இதனால் வடஇந்தியாவின் பல்வேறு எல்லையோர பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதையடுத்து மாணவர்களின் பாதுகாப்பையொட்டி ஜம்மு காஷ்மீரில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இது குழந்தைகளின் கல்வி பாதிக்காமல், பாதுகாப்பாக படிக்க உதவும் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
The post காஷ்மீரில் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் appeared first on Dinakaran.