காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டப் பணிகளை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது: சட்டசபையில் அதிமுக எம்எல்ஏவுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்

1 day ago 2

சென்னை: சட்டசபையில் விராலிமலை தொகுதி எம்எல்ஏ டாக்டர் சி.விஜயபாஸ்கர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசியதாவது: அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்ட பணிகளை விரைவு படுத்தினால் புதுக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் இருக்கும் விவசாயிகள் பயனடைவார்கள். பல ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் செழிப்படையும். இந்த திட்டத்தை தமிழக அரசு விரைவாக நிறைவேற்ற முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இததற்கு பதில் அளித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: இந்த பணிக்காக கடந்த 2022-ல் 146 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் 116 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு 47 சதவீதம் கால்வாய் வெட்டும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் 2023-24 நிதியாண்டில் 176 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் 128 கோடி செலவு செய்யப்பட்டு 86 சதவீத கால்வாய் வெட்டும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பு நிதி ஆண்டில் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது வரை 33 கோடி செலவு செய்யப்பட்டு 89 சதவீத கால்வாய் வெட்டும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போது நடைபெற்று வரும் பணிகளை தவிர்த்து நிலமெடுக்கும் பணிகள் 96 சதவீதம் முடிவுற்ற கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் எட்டு சிப்பங்களாக பிரித்து ரூபாய் 376 கோடிக்கு மதிப்பீடு தயாரித்து அரசிடம் ஒப்புதல் பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கட்டம்-2 மற்றும் கட்டம்-3 ஆகிய திடப்பணிகளை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது கலைஞர் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டம் அதனால் நிறைவேற்றாமல் விடமாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.

The post காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டப் பணிகளை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது: சட்டசபையில் அதிமுக எம்எல்ஏவுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் appeared first on Dinakaran.

Read Entire Article