காவிரி ஆற்றங்கரையில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள்

4 months ago 11

 

கரூர், பிப். 22: காவிரி ஆற்றில் பரவி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் தவிட்டுப்பாளையம், வாங்கல், நெரூர், திருமுக்கூடலூ வழியாக காவிரி ஆறு பயணித்து மாயனூர் வழியாக திருச்சி நோக்கி செல்கிறது. இதில், கரூர் மாவட்டம் நெரூர் வழியாக பயணிக்கும் காவிரி ஆற்றங்கரைப் பகுதியை ஒட்டி, அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகள் பரவிக்கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட அதிகளவு வாய்ப்புள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் காவிரி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்லும் போது, பிளாஸ்டிக் கழிவுகளும் சேர்ந்து செல்வதால் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, நெரூர் காவிரி ஆற்றுப்பகுதியை ஒட்டி பரவலாக கிடக்கும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை ஆற்றுப்பகுதியில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

The post காவிரி ஆற்றங்கரையில் குவியும் பிளாஸ்டிக் கழிவுகள் appeared first on Dinakaran.

Read Entire Article