காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டம்

2 months ago 6

அரியலூர். டிச. 5: அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டம் எஸ்பி அலுவலகத்தில் நடந்தது. காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறை தீர் கூட்டம் ஒவ்வொரு புதன்கிழமையன்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெறுகிறுது. அதன்படி, காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் வராந்திர சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 18 பேர் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாக புகார் மனுவை அளித்தனர். மனுதாரர்களின் குறைகளை கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

The post காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article