திருப்புவனம்: காவல் நிலைய மரணங்களை தடுக்க தமிழக காவல் துறையில் சீர்திருத்தம் தேவை. அதற்கு ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலிருந்து இன்றுவரை தொடரும் காலனியாதிக்க மனப்பான்மையிலிருந்து மாற வேண்டும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரத்தில் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட மடப்புரம் பத்திரகாளி கோயில் ஒப்பந்த காவலாளி அஜித்குமாரின் தாயார் மாலதியை இன்று (செவ்வாய்க்கிழமை) சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம் சந்தித்து ஆறுதல் கூறினார்.