காலவரம்பு 30ம் தேதி வரை நீட்டிப்பு சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யலாம்: தமிழக அரசு வேண்டுகோள்

2 months ago 12

சென்னை: சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான காலவரம்பு 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், காப்பீடு செய்யாத விவசாயிகள் காப்பீடு செய்ய தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் துறை செயலாளர் அபூர்வா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட தொடர் முயற்சியால் நெற்பயிர் காப்பீட்டுக்கான கடைசி தேதியை வருகிற 30ம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. எனவே, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் பொது சேவை மையங்கள் செயல்படுவதால் அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தர்மபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்,

பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 30ம் தேதிக்குள் இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயன் அடையலாம். நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவுக்குள் ஏற்கனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post காலவரம்பு 30ம் தேதி வரை நீட்டிப்பு சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யலாம்: தமிழக அரசு வேண்டுகோள் appeared first on Dinakaran.

Read Entire Article