அரூர், பிப்.22: அரூர் கடைவீதியில் உள்ள வாணீஸ்வரர் கோயிலில், காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனையொட்டி காலபைரவருக்கு அஷ்டமி யாகம் நடத்தப்பட்டு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஸ்ரீ வாணீஸ்வரர் வழிப்பாடு சங்கம் உறுப்பினர்கள், அர்ச்சகர்கள் நாகராஜ், ரகு ஆகியோர் செய்திருந்தனர். அதே போல் கோட்டை காளியம்மன் கோயிலிலும் காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜைகள் நடைபெற்றது.
The post கால பைரவர் சன்னதியில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.