கார்த்திகை தீப அகல் விளக்கு விற்பனை அதிகரிப்பு

2 months ago 10

 

கரூர், டிச. 9: ஆண்டுதோறும் தமிழக மக்களால் கார்த்திகை தீப விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கார்த்திகை பண்டிகையை தொடர்ந்து மூன்று நாட்கள் தங்கள் வீடுகளில் அகல் விளக்குகளை ஏற்றி இறைவனை வழிபாடு செய்து வருகின்றனர். அந்த வகையில் வரும் வாரம் கார்த்திகை பண்டிகை கொண்டாடப்படவுள்ளன. இதன் காரணமாக கரூர் மாநகராட்சிக்குட்பட்ட அண்ணாவளைவு, லைட்ஹவுஸ் கார்னர், பசுபதிபாளையம், ஜவஹர் பஜார் போன்ற பல்வேறு பகுதிகளில் அகல் விளக்குகள் செய்யப்பட்டு அதன் அளவுக்கு ஏற்ப விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை பண்டிகைக்கு முன்பேயே வாங்கி பண்டிகையன்று பயன்படுத்தும் வேண்டும் என்பதால் கடந்த சில நாட்களாக அகல் விளக்குகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கார்த்திகை தீப அகல் விளக்கு விற்பனை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article