கார்த்திகை 2ம் வார சோம வாரம்; சிவன் கோயில்களில் சங்காபிஷேகம்

2 months ago 10

திருச்சி: கார்த்திகை சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு மிகவும் விசேஷமான நாள். கார்த்திகை சோமவாரத்தில் அனைத்து சிவாலயங்களிலும் சிவபெருமானுக்கு, சிவலிங்கத் திருமேனிக்கு 108, 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு லிங்கத்துக்கு அபிஷேகம் செய்யப்படுகம். இன்று கார்த்திகை இரண்டாவது சோமவாரத்தையொட்டி சிவன்கோயில்களில் இன்று மாலை சங்காபிஷேகம் நடைபெறுகிறது.

இதையொட்டி சிவன் கோயில்களில் காலை சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தஞ்சை பெரியகோயிலில் பெருவுடையாருக்கு 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிவலிங்க வடிவிலான சங்குகள் அடுக்கி வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதேபோல, அடுத்த மாதம் 2, 9ம் தேதிகளில் சோம வார சிறப்பு பூஜை நடைபெறும். இதேபோல் தமிழகத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் இன்று மாலை சங்காபிஷேகம் நடக்கிறது.

The post கார்த்திகை 2ம் வார சோம வாரம்; சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் appeared first on Dinakaran.

Read Entire Article