காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இலங்கையை கண்டித்து தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் மீது தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினர் மற்றும் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துவது, கைது செய்வது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. கடந்த 28ஆம் தேதி காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இது மீனவர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், கிளிஞ்சல் மேடு பகுதியை சேர்ந்த மீனவர்களை விடுவிக்க வேண்டும், தரமான சிகிச்சை அளிக்க வேண்டும், துப்பாக்கி சூடு சம்பவத்தை உடனடியாக ஒன்றிய அரசு தடுத்து நிறுத்த வேண்டும், இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அத்தகைய செயலை கண்டித்தும் கைது நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தியும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
குறிப்பாக, கடலுக்கு ஏற்கனவே மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் திரும்ப வருவதற்கும் உண்டான நடவடிக்கையை மீனவர்கள் செய்து வருகின்றனர். இதை தொடர்ந்து வரும் 17ஆம் தேதி 14ஆம் தேதி காரைக்காலில் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர். சாலை மறியல்,ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
The post காரைக்கால் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு: இலங்கையை கண்டித்து தொடர் வேலை நிறுத்த போராட்டம் appeared first on Dinakaran.