காரைக்காலில் 1330 திருக்குறள் ஒப்பித்த அரசு பள்ளி மாணவி

2 months ago 10

காரைக்கால்,டிச.6: காரைக்காலில் 1330 திருக்குறள்களையும் ஒப்புவித்த அரசு பள்ளி மாணவிளை கலெக்டர் மணிகண்டன் பாராட்டினார். காரைக்கால் மாவட்டம் விழிதியூர் அரசு உயர்நிலைப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவி சாந்தினி. இவர் 1330 திருக்குறள்களையும் மனப்பாடம் செய்து விளக்கத்துடன் ஒப்புவிக்கும் திறன் கொண்ட மாணவியாக உள்ளார். இதனிடையே கோவிந்தசாமி பிள்ளை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காளிதாஸ் மூலம் காரை பாரதி தமிழ்ச்சங்கத்திற்கு அறிமுகம் செய்யப்பட்ட மாணவி நேற்று காரைக்கால் மாவட்ட கலெக்டரை அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.

மாணவி சாந்தினியின் திறமையை பாராட்டிய கலெக்டர் மணிகண்டன் மென்மேலும் வளர பாராட்டுகளை தெரிவித்தார். நிகழ்வின்போது முதன்மைக் கல்வி அலுவலர் விஜயமோகனா, காரை பாரதி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வைஜெயந்திராஜன், துணைத் தலைவர் இளங்கோவன், பொதுச்செயலாளர் கிருஷ்ணன், பள்ளியின் பட்டதாரி ஆசிரியை மஞ்சுளா ஆகியோர் உடனிருந்தனர்.

The post காரைக்காலில் 1330 திருக்குறள் ஒப்பித்த அரசு பள்ளி மாணவி appeared first on Dinakaran.

Read Entire Article