காய்கறி வாங்க வெளி மாநில வியாபாரிகள் வராததால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு

5 hours ago 2

ஒட்டன்சத்திரம்: பொது வேலை நிறுத்தத்தையொட்டி கேரளா உள்ளிட்ட வெளிமாநில வியாபாரிகள் வராததால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் நேற்று ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து, நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்று வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல், அனைத்து பகுதிகளிலும் பஸ்கள் வழக்கம் போல இயங்கின.

ஒட்டன்சத்திரத்தில் உள்ள காந்தி காய்கறி மார்க்கெட்டில் உள்ளூர் வியாபாரிகள், வெளிமாவட்ட வியாபாரிகள் மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா வியாபாரிகளும் வந்து காய்கறி வாங்கிச் செல்வர். இந்நிலையில், தொழிற்சங்கங்களின் பொதுவேலை நிறுத்த அறிவித்ததால், நேற்று கேரள உள்ளிட்ட வெளிமாநில வியாபாரிகள் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு கொள்முதல் செய்ய வரவில்லை. விவசாயிகளும் தங்கள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டுவராமல் தோட்டங்களில் இருப்பு வைத்துக் கொண்டனர். நேற்று மட்டும் காய்கறி மார்க்கெட்டில் ரூ.2 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post காய்கறி வாங்க வெளி மாநில வியாபாரிகள் வராததால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article