மண்வெட்டியால் அடித்து விவசாயி கொலை முதியவர் கைது குடியாத்தம் அருகே வரப்பு தகராறில்

2 hours ago 1

குடியாத்தம், ஜூலை 10 : குடியாத்தம் அருகே வரப்பு தகராறில் மண்வெட்டியால் அடித்து விவசாயி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக முதியவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தட்டாங்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (40), விவசாயி. இவருக்கும் அவரது பெரியப்பாவான அதே பகுதியை சேர்ந்த விநாயகம் (82) என்பவருக்கும் நிலப்பிரச்னை சம்பந்தமாக ஏற்கனவே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 6ம் தேதி விவசாய நிலத்தில் ரமேஷுக்கும், விநாயகத்திற்கும் வரப்பு தகராறு ஏற்பட்டது. அப்போது, ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் பேசி சரமாரியாக தாக்கிக் கொண்டார்களாம்.

இதனால் ஆத்திரம் அடைந்த விநாயகம் அருகில் இருந்த மண்வெட்டியை எடுத்து ரமேஷ் மீது கழுத்து மற்றும் தலைப்பகுதியில் வெட்டி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த ரமேஷை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் கொலை வழக்குப்பதிந்து முதியவர் விநாயகத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இறந்த ரமேஷ் உடலை பிரேத பரிசோதனைக்கு பின் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

The post மண்வெட்டியால் அடித்து விவசாயி கொலை முதியவர் கைது குடியாத்தம் அருகே வரப்பு தகராறில் appeared first on Dinakaran.

Read Entire Article