காதல் தோல்வி வாலிபர் தற்கொலை

2 months ago 11

சிவகாசி, டிச.19: சிவகாசி அருகே பழையவெள்ளையாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அமல்ராஜா மகன் கார்த்தீஸ்வரன்(19). பந்தல் போடும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் கடந்த ஒரு வருடமாக இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணிற்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் வேறு ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. இதனால் வாலிபர் கார்த்தீஸ்வரன் பெரும் மனஉளைச்சலில் இருந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் கார்த்தீஸ்வரன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காதல் தோல்வி வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article