காதல் கணவன் மீது போக்சோ வழக்கு

4 hours ago 3

சங்ககிரி, மே 6: சேலம் மாவட்டம், இடைப்பாடி தாலுகா கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (24), கூலி தொழிலாளி. இவர், 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் சிறுமியின் பெற்றோர்களுக்கு தெரிய வந்ததால், எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சக்திவேல் கடந்த ஆண்டு மே மாதம் 23ம் தேதி சிறுமியை அழைத்துச் சென்று விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை பெற்றோர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் சக்திவேல் சிறுமியை அழைத்துச் சென்று தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், சிறுமி தற்போது 4 மாதம் கர்ப்பமாக உள்ளார். இது குறித்து கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் மேனகா, நேற்று சங்ககிரி மகளிர் போலீசில் சிறுமியை அழைத்துச் சென்று, திருமணம் செய்து கர்ப்பமாக்கிய சக்திவேல் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் கார்த்திகேயினி, சிறப்பு எஸ்ஐ கலையரசி ஆகியோர் சக்திவேல் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காதல் கணவன் மீது போக்சோ வழக்கு appeared first on Dinakaran.

Read Entire Article