காஞ்சிபுரம் பிரபந்தம் பாடுவதில் இரு பிரிவினரிடையே தகராறு

4 months ago 15


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் பாடுவதில் இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. முதலில் பாடல்கள் பாடுவது யார் என தென்கலை, வடகலை பிரிவினர் இடையே கோவில் வளாகத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. தென்கலை பிரிவினர் முதலில் பாட அனுமதி உள்ள நிலையில் வடகலை பிரிவினர் நாங்களும் பாடுவோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவில் நிர்வாகம், காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து பாடல்கள் பாடப்பட்டது.

The post காஞ்சிபுரம் பிரபந்தம் பாடுவதில் இரு பிரிவினரிடையே தகராறு appeared first on Dinakaran.

Read Entire Article