“காங்கிரஸ் வாரிசு அரசியல் செய்கிறது” - பிரியங்கா போட்டி குறித்து தமிழிசை விமர்சனம்

4 months ago 26

சென்னை: வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தியை நிறுத்துவதன் மூலம் காங்கிரஸ் கட்சி தெளிவான வாரிசு அரசியலில் ஈடுபடுவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உண்மையில் ராகுல் காந்தி வயநாட்டு மக்களை ஏமாற்றிவிட்டார். நாடாளுமன்றத் தேர்தலின்போது வயநாடு தொகுதியில் போட்டியிட்ட அவர், வேறொரு தொகுதியில் தான் போட்டியிட திட்டமிட்டுள்ளதை மறைத்துவிட்டார். வயநாடு மக்கள் மிகுந்த நம்பிக்கையோடு ராகுல் காந்திக்கு வாக்களித்தார்கள். ஆனால், அவர் வாக்களித்த மக்களை ஏமாற்றிவிட்டார்.

Read Entire Article