கவிஞர் தணிகைச்செல்வன் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

3 months ago 14

சென்னை: கவிஞர் தணிகைச்செல்வன் மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: முதுபெரும் கவிஞர் தணிகைச்செல்வன் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து வேதனைஅடைந்தேன். அவரது கவிதை தொகுதியை 2001ம் ஆண்டு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் வெளியிட்டு உரையாற்றியபோது, “பாரதியாருடைய வேகமும், பாரதிதாசனுடைய சொல்வளமும் கொண்டதுதான் தணிகைச்செல்வன் கவிதை என்று சொன்னால் அது மிகையாகாது” என்று பாராட்டினார்.

கவிஞர் தணிகைச்செல்வனின் மறைவு தமிழ்கூறும் நல்லுலகிற்கும், தமிழ்ச் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். கவிஞர் தணிகைச்செல்வன், தமது கவிதைகள் மூலம், தமிழர்களின் நெஞ்சில் என்றென்றும் நீங்காது நிலைத்திருப்பார்.

The post கவிஞர் தணிகைச்செல்வன் மறைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article