கவரைப்பேட்டை ரயில் விபத்து: மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்ட ரயில்கள்

6 months ago 33

சென்னை: கவரைப்பேட்டையில் மைசூருவில் இருந்து தர்பங்காவுக்கு சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில், நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பெட்டிகளில் தீ பிடித்தது.

வெள்ளிக்கிழமை (அக்.11) இரவு 8.27 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டது. இதையடுத்து மீட்பு பணிகள் தற்போது அங்கு நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் 12 முதல் 13 பெட்டிகள் வரை தடம் புரண்டது. உயிரிழப்பு ஏதும் இந்த விபத்தில் ஏற்படவில்லை என தகவல் கிடைத்துள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சுமார் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Read Entire Article