கழுகுமலை, ஜன. 14: கழுகுமலை பேரூராட்சியில் புகையில்லா போகி குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கழுகுமலை தேர்வுநிலை பேரூராட்சியில் புகையில்லா போகி குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரூராட்சி துணை தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கி கோவில்பட்டி மெயின் ரோடு, மேலரதவீதி, தெற்குரத வீதி, கீழரத வீதி, தேரடி விதி வழியாக வந்து பேரூராட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணி முடிவடைந்தது. இதில் தூய்மை பணியாளர்கள், பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
The post கழுகுமலை பேரூராட்சியில் புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.